Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

திருச்சி அருகே 212 கிலோ கஞ்சா பறிமுதல்…கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது…!!

சமயபுரம் அருகே காரில் கடத்திவரப்பட்ட 212 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியில் காவல் துறையினர்  தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆந்திராவில் இருந்து காரில் கஞ்சா கடத்திவரப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து போலீசார் சோதனையை தீவிரப்படுத்தினர்.

அப்போது அந்த வழியாக வந்த டொயோட்டா காரினை போலீசார் மடக்கி பிடித்தனர். அதில் சோதனையிட்டபோது 212 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருப்பதை கண்டறிந்த போலீசார் அதனை பறிமுதல் செய்து  காரில் வந்த இரண்டு இளைஞர்களை கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |