பெண் ஒருவர் தன் கணவர் வெளிநாட்டில் இருந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியில் வசிப்பவர் திருமூர்த்தி. இவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கும், மோனிகா (23) என்ற பெண்ணுக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. தற்போது இரண்டு மகன்கள் உள்ளனர். திருமூர்த்தி வெளிநாட்டில் வேலை செய்து வந்ததால் ஆண்டிற்கு இரண்டு முறை சொந்த ஊருக்கு வந்து ஒரு மாதம் தங்கி இருந்து விட்டு மீண்டும் வெளிநாடு சென்றுள்ளார்.
இதனால் மோனிகா தன்னுடைய கணவரிடம் அடிக்கடி தொலைபேசியில் வீடியோ கால் மூலம் பேசி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று திடீரென மோனிகா அவருடைய வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.