பொறியியல் மாணவர்களுக்கான நடப்பு செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் ஆன்லைன் மூலமாக மாணவர்கள் அனைவருக்கும் வகுப்புகள் நடத்தப்பட்டு தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதனையடுத்து டிசம்பர் 7ஆம் தேதி முதல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் திறக்கப்படுகின்றன.
இதனையடுத்து பொறியியல் மாணவர்களுக்கான நடப்பு செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இறுதியாண்டு மாணவர் களுக்கான தேர்வுகள் டிசம்பர் 14ம் தேதி தொடங்கும் என்றும், இந்தத் தேர்வுகள் முடிந்த பிறகே இதர மாணவர்களுக்கான தேர்வு தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரிவான அட்டவணை விரைவில் அண்ணா பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் வெளியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.