Categories
மாநில செய்திகள்

Breaking: இன்று பள்ளி மாணவர்களுக்கு… அரசு செம அறிவிப்பு…!!!

காரைக்கால் மாவட்டத்தில் புயல் காரணமாக இன்று அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.

வங்க கடலில் உருவான புரெவி புயல் நேற்று முன்தினம் திரிகோணமலை அருகே கரையைக் கடந்தது. அதன் பிறகு தென் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்த புயல், கன்னியாகுமரி மற்றும் பாம்பனுக்கு இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று மாலை 7 மணியளவில் திடீரென புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. தற்போது புயல் மேலும் வலுவிழுந்து விட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருந்தாலும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

இதனையடுத்து காரைக்கால் மாவட்டத்தில் புயல் காரணமாக இரவு முதல் மழை பெய்து கொண்டிருப்பதால், மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காரைக்கால் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்திற்கும் இன்று விடுமுறை அளித்து புதுச்சேரி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories

Tech |