விந்து என்பது மிகச் சிறிய அளவில் (150 மி.கிராம் அளவு) சர்க்கரை சத்துள்ள, மூக்குச் சளி போன்ற ஒரு திரவம் மட்டுமே. அது ஆண் உயிரணுக்களுக்குப் போதுமான சத்தே தவிர இதனால் உடல் சோர்வு உண்டாகும் என்று நினைப்பது தவறு. சுய இன்பத்திற்குப் பிறகு உங்கள் உடல் களைப்புக்கு காரணம் என்னவென்றால், பாலுணர்வு என்பது குறிமலரின் வாயிலாக உடலில் ஏற்படும் ஒருவித இன்பப்பரப்புதான்.
அப்போது இரத்தஓட்டம் அதிகரிப்பதோடு, உடல் தசைகளும், நரம்புகளும் முறுக்கேறுகின்றன. விந்து வெளியேறும் பொழுது ஆண்குறி முனையில் அழுத்தம் ஏற்பட்டு நரம்புகளில் இன்பத்துடிபபு ஏற்படுகிறது. இதனால் உச்ச இன்பம் அடைகிறீர்கள், பின்பு உங்கள் உடல் சாதாரண நிலைக்கு வருகிறது. அப்போது ஏற்படும் உடல் தளர்ச்சியும், மன அமைதியும், ஒருவிதக் களைப்பு உணர்வைக் ஏற்படுத்துகிறது. தூக்க உணர்வையும் ஏற்படுத்துகிறது.
இதுவரை ஆட்டிப் படைத்த பாலுணர்வுக் கற்பனைகள் தற்காலிகம் மட்டுமே. இந்த உடல் சோர்வு, நீங்கள் சாதாரணமாக விளையாடி விட்டு வந்தபிறகு ஏற்படும் உடல் சோர்வு போன்றுதான் இதிலும் சக்தி விரயம் ஆகும். ஆனால் விளையாட்டில் ஏற்படும் சக்தி விரயத்தை விட குறைவுதான்.