பிளாஸ்டிக் பொருட்களை ஒழிப்பதில் ரயில்வேயின் துறையின் பங்களிப்பாக ரயில் நிலையங்களில் மண் கோப்பைகளில் தேநீர் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பிளாஸ்டிக் பொருள்களை ஒழிப்பதற்கு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. மளிகைக் கடைகள், டீ கடைகள், உணவகங்கள், பேக்கரி போன்றவற்றில் பிளாஸ்டிக் பைகளை பொருட்களை உபயோகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை மீறி உபயோகிப்பவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகின்றது. மேலும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக துணிப்பைகள், பேப்பர் கப்புகள் போன்றவற்றை உபயோகிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது புதிதாக நாடு முழுவதும் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் பிளாஸ்டிக் பைகளுக்கு பதில் மண் கோப்பைகளில் இனி தேனீர் விற்கப்படும் என மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். இந்த முயற்சி பிளாஸ்டிக் இல்லாத இந்தியாவிற்கு ரயில்வேயின் பங்களிப்பாக இருக்கும். மண் கோப்பைகள் சுற்றுச்சூழலை காக்கின்றன. லட்சக்கணக்கான மக்கள் இதன் மூலம் வேலை வாய்ப்பை பெற முடியும் என்றும் கூறினார்.