Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை முதல் அதிதீவிரம்… பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. அதனால் புதிதாக உருவாகும் புயல் டிசம்பர் இரண்டாம் தேதி மாலை இலங்கை கடற் கரையை கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதனால் தென் தமிழகத்தில் டிசம்பர் இரண்டாம் தேதி ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும்.

மேலும் ஒரு சில இடங்களில் அதிக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமன்றி தமிழகத்தில் டிசம்பர் 1 முதல் 4ஆம் தேதி வரையில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |