Categories
மாநில செய்திகள்

405 பேருக்கு மட்டுமே வாய்ப்பு… இது என்ன நியாயம்?… தமிழக அரசுக்கு கேள்வி…!!!

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 405 பேருக்கு மட்டுமே இடம் கிடைத்திருப்பது வேதனை அளிப்பதாக கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு நடந்து முடிந்து, அதற்கான மருத்துவ கலந்தாய்வு நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் மொத்தம் 3,400 இடங்களில் அரசு பள்ளி 405 பேருக்கு மட்டுமே மருத்துவ இடம் கிடைத்துள்ளது. அது தனக்கு வேதனை அளிப்பதாக கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

தற்போது நீண்ட நாள் போராட்டத்திற்கு பிறகு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு அரசு பள்ளி மாணவர்களுக்கு ஓரளவு நீதியும், நியாயமும் மட்டுமே கிடைத்துள்ளது என அவர் கூறியுள்ளார். இதற்கு அரசு கட்டாயம் பதில் சொல்ல வேண்டும்.

Categories

Tech |