Categories
தேசிய செய்திகள்

நிவர் புயலில் எடுக்கப்பட்டதாக கூறி… வைரலாகும் பொய்யான வீடியோ… வெளியான உண்மை..!!

நிவர் புயலின் போது சென்னை அருகில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தென் மேற்கு வங்க கடலில் உருவான புயல் தீவிர புயலாக மாறி கரையை கடந்தது. புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் கனமழை பெய்து வந்தது. நீர்நிலைகள் நிரம்பி உபரிநீர் திறந்து விடப்பட்டது. இந்நிலையில் புயல் காற்றில் விளம்பர பதாகை அடித்து செல்லப்பட்டதால் மோட்டார் சைக்கிள் பயணிகள் விபத்தில் சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் ஆய்வு செய்ததில் அது பாகிஸ்தானின் கராச்சியில் எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. மேலும் இந்த வீடியோ ஆகஸ்ட் மாதத்தில் எடுக்கப்பட்டதாகவும், முன்னதாக இந்த வீடியோ ஐதராபாத்தில் எடுக்கப்பட்டதாக கூறி வைரலானது. அந்த வகையில் இந்த வீடியோ சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் எடுக்கப்படவில்லை என்பது உறுதியானது. போலி செய்திகளை பரப்பாதீர்கள்.போலி செய்திகளால் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதனால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

Categories

Tech |