தமிழகத்தில் மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு நடப்பாண்டு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. அரசு மருத்துவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் ஆணைக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது. தமிழக அரசின் உத்தரவை உயர் நீதிமன்றம் உறுதி செய்திருந்த நிலையில் தனியார் மருத்துவர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருந்தார்கள். இந்த வழக்கு தொடர்ந்து விவாதம் நடைபெற்றது. இன்று உச்சநீதிமன்ற உத்தரவு வெளியாகியிருக்கிறது. மருத்துவர்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது.
Categories
மருத்துவர்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை – உச்சநீதிமன்றம் உத்தரவு …!!
