Categories
மாநில செய்திகள்

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு…. தானே சமைத்து கொடுத்த எம்எல்ஏ…!!

அதிமுக எம்எல்ஏ ஒருவர் புயல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தானே உணவு சமைத்து வழங்கியுள்ளார்.

நிவர் புயலினால் புதுச்சேரியில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. மேலும் மரங்கள் வேரோடு சாய்ந்தும், மின்கம்பங்களும் சாய்ந்தும் கிடக்கின்றன. இதனால் அவற்றை பாதுகாப்பாக அகற்றும் பணியில் பொதுப்பணித் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரி மாநிலம் முத்தையால்பேட்டை தொகுதியில் பாதிக்கப்பட்டோரை அதிமுக எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

இதையடுத்து அப்பகுதியில் தங்கியிருக்கும் மழைநீரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அகற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். பின்னர் நிவாரண மையத்திற்கு சென்று அங்கு தங்கவைக்கப்பட்டிருந்த பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து அவர்களுக்கு தேவையான உணவை தானே சமைத்து கொடுத்துள்ளார். மேலும் முத்தையால்பேட்டை தொகுதியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், குறித்தும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

Categories

Tech |