Categories
சென்னை மாநில செய்திகள்

மேலும் 5 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு… அடையாற்றில் வெள்ளப்பெருக்கு… அச்சத்தில் மக்கள்..!!

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 5 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

செம்பாக்கம் ஏரியில் இருந்து திடீரென அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டதால் கடந்த 2015ஆம் ஆண்டு சென்னை வெள்ளத்தில் மிதந்தது. அது தற்போது நடந்து விடக்கூடாது என்பதால் கனமழை பெய்து கொண்டிருக்கும் நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வந்தனர். சென்னை மற்றும் சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று இருந்து மழை பெய்து வருவதால், ஏரியின் நீர்மட்டம் 22 அடியை நெருங்கியது.

இன்று மதியம் 12 மணியளவில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. முதலில் ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டதால், அதன்பின் ஆயிரத்து 500 கன அடி நீர் உயர்த்தப்பட்டது. ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துக் கொண்டிருப்பதால் ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டது. மாலை 6 மணியில் இருந்து 5,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |