Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கன்னியாகுமரி கடலில் வினோத காட்சி… அச்சத்தில் உறைந்த மக்கள்… என்ன நடக்க போகிறது?…!!!

கன்னியாகுமரியில் கடல் அலையின்றி குளம்போல் காட்சி அளித்ததால் மக்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் நிவர் புயல் இன்று கரையை கடக்கும் என்பதால் கடலோரப் பகுதிகளில் மணிக்கு 120 கிமீ வேகத்தில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் தமிழகத்தில் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சர்வதேச சுற்றுலா தலமாக திகழும் கன்னியாகுமரியில் கடல் அலைகள் இன்றி குளம்போல் நேற்று காட்சி அளித்தது.

அதிலும் குறிப்பாக இந்திய பெருங்கடல், வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் ஆகிய மூன்று கடல்களும் அலைகள் ஏதுமில்லாமல் அமைதியாக இருந்தது. அதனால் பொதுமக்கள் அனைவரும் என்ன நடக்குமோ? ஏது நடக்குமோ? என்ற அச்சத்தில் உறைந்தனர். இதனையடுத்தே கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் பேரிடர் மீட்பு குழுவினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |