Categories
சற்றுமுன் மாநில செய்திகள் வானிலை

தீவிர புயலாக மாறிய ”நிவர்”….. நண்பகலுக்குள் அதிதீவிர புயலாக மாறும் …!!

தென் மண்டல வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் நிவர் புயல் நகர்வு குறித்து சற்று முன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வங்கக் கடலில் உருவான நிவர் புயல், அதி தீவிர புயலாக நண்பகலுக்குள்  உருமாறும். 6 கிலோ மீட்டர் வேகத்தில் நகரும். நிவர் புயல் காரைக்கால் – மாமல்லபுரம் இடையே இன்று இரவு கடையை கடக்கும் என தெரிவித்தார்.

அதிகாலை 2 மணிக்கு கடலூருக்கு 310 கிலோ மீட்டர், புதுச்சேரிக்கு 320 கிலோ மீட்டர், சென்னைக்கு 350 கிலோ மீட்டர் தொலைவில் நிவர் புயல் மையம் கொண்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் 14 சென்டிமீட்டர் மழை எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |