சேலத்தில் ,ஓடும் ரயிலில் நடந்த நகைபறிப்பு சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
சேலம் ,சங்ககிரி அருகே மாவெலிபாளையம் என்ற ரயில் நிலையம் உள்ளது. இதன் அருகில் தரைவழி பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது . அதனால் ரயில்கள் குறைந்த வேகத்தில் இயக்கப்படுகின்ற நிலையில் கொள்ளையர்கள் சென்ற வெள்ளிக்கிழமை நள்ளிரவில் 4 ரயில்களில் ஏறி 24 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர் .
ரயில்வே காவல் கண்காணிப்பாளர் ரோகித் நாதன் ராஜகோபால் ,விசாரணை நடத்திய நிலையில் ,20 பேரை பிடித்து ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.