ஆந்தரா காரக்குழம்பு செய்ய தேவையான பொருள்கள் :
கடுகு – 1 ஸ்பூன்
பெருங்காயத்தூள் – அரை ஸ்பூன்
புளி – எலுமிச்சை அளவு
எண்ணெய் – 100மிலி
வெந்தயம் – 1 ஸ்பூன்
மிளகாய்த்தூள் – 100கி
உப்பு – தேவையான அளவு
செய்முறை :
முதலில் மூன்று கப் தண்ணீரில் புளியை ஊறவைக்க வேண்டும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சுட்டதும் பெருங்காயத்தூளைப் போட வேண்டும். வெந்தயம் போட்டு லேசாய் வறுத்து, கடுகைப் போட்டு வெடிக்க விட வேண்டும்.
அதன் பின் புளித்தண்ணீரை விட்டு அது சுட்டதும் மிளகாய் தூள் போட்டு கிளற வேண்டும். உப்புப் போட்டுக் கலந்து கொதி வந்ததும், கூடவே மணம் வந்ததும் இறக்கி விடலாம். சுவையான ஆந்தரா காரக்குழம்பு தயார்.