தாய் ஒருவர் தன் இரட்டைக்குழந்தைகளை கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் உள்ள சோம் மாவட்டத்தில் 40 வயது மதிக்கத்தக்க தாய் ஒருவர் தன்னுடைய 13 வயதுள்ள இரட்டை குழந்தைகளை கொலை செய்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தன் குழந்தைகளை கொலை செய்த அந்த பெண் தான் குற்றவாளி என்பது உறுதி செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் கைதான அந்தத் தாய் மனநிலை பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்.
எனவே இக்கொலைக்கான காரணம் என்ன என்று கண்டுபிடிக்கமுடியவில்லை? என்று காவல்துறையினர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. தன் குழந்தைகளை கொன்றுவிட்டு உறவினரின் ஒருவர் வீட்டுக்கு சென்ற அந்தப் பெண்மணி தான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டதாக கூறியதை அடுத்து தான், குழந்தைகள் பலியாகியுள்ள சம்பவம் தெரியவந்துள்ளது. இதையடுத்து இக்கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது