கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல மாவட்ட பகுதிகளில் தொடர் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு பெரும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். இந்நிலையில்,
வருகிற நவம்பர் 23 அன்று தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது எனவும், அது வலுவடைந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி மேற்கு, வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து இலங்கை கடற்கரையை நோக்கிச் செல்லும் என்பதால், நவம்பர் 22 முதல் மீனவர்கள் யாரும் கடலுக்குள் மறு அறிவிப்பு வரும் வரை செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.