நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் கருப்பன் குசும்புக்காரன் என்ற வசனத்தை பேசி மிகவும் பிரபலமடைந்த நடிகர் தவசி. இவர் தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் கூட நடிகர் ரஜினி நடித்துள்ள அண்ணாத்த திரைப்படத்தில் இவர் இடம் பெற்றுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக மக்களை வாய்விட்டு சிரிக்க வைத்த இந்த மனிதரை நாம் ஆரோக்கியமான உடல்நிலையில் கண்டிருப்போம்.
ஆனால் தற்போது உடல் நலம் குன்றி மெலிந்த தோற்றத்தில் எலும்பும், தோலுமாக இருக்கும் அவர் மருத்துவ சிகிச்சைக்காக உதவி செய்யும்படி வேண்டியுள்ளார். அவருக்கு கேன்சர் வியாதி இருப்பதாகவும் அதன் காரணமாகவே இப்படி அவர் அவதிப்படுவதாகவும் கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவில் அவரே கூறியுள்ளார். அதில்,
தமிழ் படங்களில் ரஜினியின் அண்ணாத்த திரைப்படம் வரை பல படங்களில் நடித்துள்ளேன். எனக்கு இப்படி ஒரு வியாதி வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அந்த கருப்பன் எனக்கு இப்படி ஒரு வியாதியை கொடுத்துட்டான். என்னோடு இதுவரை நடித்த சக நடிகர்கள் தயவுசெய்து எனக்கு பண உதவி செய்து, என்னை மீட்டு மீண்டும் உங்களோடு நடிக்க செய்யுங்கள் என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். இந்த வீடியோவை கண்ட சிவகார்த்திகேயன் ரசிகர்கள், அவருக்கு உதவி செய்யுமாறு சிவகார்த்திகேயனை டேக் செய்து வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.