Categories
உலக செய்திகள்

இந்தியாவில் கூடிய கூட்டம்… சீனாவுக்கு 40,000 கோடி இழப்பீடு…!!!

இந்திய மக்கள் சீன பொருட்களை புறக்கணித்ததால் சீனாவிற்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முக்கிய நகரங்களில் பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. தீபாவளிக்காக பொருட்களை வாங்குவதற்கு லட்சக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டனர். அதனால் தீபாவளிப் பண்டிகையின் போது மட்டும் 75 ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெற்றுள்ளது.

அதுமட்டுமன்றி வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் சீன பொருட்களை புறக்கணித்து விட்டதால் சீனாவிற்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தகவலை அனைத்து இந்திய வர்த்தக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

Categories

Tech |