Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கார் மோதியதில்…. மேய்ச்சலுக்கு சென்ற 9 ஆடுகள் பலி…!!

மேய்ச்சலுக்கு சென்று திரும்பிய ஆடுகள் மீது கார் மோதி விபத்து ஏற்படுத்திய ஓட்டுனரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

சென்னை மாவட்டம், பூந்தமல்லி மேல்மா நகர் பகுதியில் வசிப்பவர்கள் ராஜி மற்றும் ஜீவா. இவர்கள் இருவரும் சொந்தமாக ஆடுகள் வளர்த்து வந்துள்ளனர். இந்த ஆடுகள் காலை நேரத்தில்  மேய்ச்சலுக்காக அவிழ்த்து விடப்படும். இதையடுத்து அவை பூந்தமல்லி – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள வயல்வெளிகளில் மேய்ந்து விட்டு மாலையில் வீட்டிற்கு திரும்பி விடுவது வழக்கம். இந்நிலையில், சம்பவத்தன்று இந்த ஆடுகள் மேய்ச்சலுக்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது, பூந்தமல்லி அருகே பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை கடந்துள்ளன.

அச்சமயம் அந்த வழியாக வந்த கார் ஒன்று சாலையை கடந்த ஆடுகளின் மீது வேகமாக மோதியதில் 9 ஆடுகள் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளன. இது குறித்து தகவல் அறிந்த ஆட்டின்  சொந்தக்காரர்கள் அதிர்ச்சியடைந்து ஓடிவந்துள்ளனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, கார் உரிமையாளரை தேடி வருகின்றனர்.

Categories

Tech |