தஞ்சாவூர் மாவட்டத்தில் கொடுத்த கடனை திருப்பி கேட்டவரை அரிவாளால் வெட்டியா சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் பகுதிக்கு அருகே உள்ள எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் சந்திரன் இவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன் தனது பக்கத்து தெருவில் வசித்து வந்த பாலன் என்பவர் மகனின் திருமணத்திற்கு ஒரு லட்சம் கடன் வாங்கியிருந்தார் இந்நிலையில் பாலன் பாதி பணத்தை திருப்பி கொடுத்துவிட்ட நிலையில் மீதமுள்ள பணத்தை கொடுப்பதற்கு காலம் தாழ்த்தி வந்தார் இதனால் சந்திரனுக்கும் பாலனுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது இதனையடுத்து நேற்றைய தினம் சந்திரனும் அவரது நண்பரும் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த பொழுது கபிஸ்தலம் மெயின் ரோட்டில் பாலனும் அவரது மகனும் சந்திரனை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர்
இதில் சந்திரனும் அவரது நண்பரும் படுகாயமடைந்த நிலையில் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் அதன்பின் கபிஸ்தலம் காவல் துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து பாலன் பாபு ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்