சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே எரிவாயு சிலிண்டர் வெடித்து , தாய் தனது இரு குழந்தைகளுடன் உயிரிழந்த சம்பவம் பெரும்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .
சிங்கம்புணரி அருகே கே.உத்தம்பட்டியை சேர்ந்தவர் விவசாயி கருப்பையா. அவர் தனது மனைவி சின்னம்மாள் மற்றும் இரு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார் .இந்நிலையில் சின்னம்மாள் வீட்டில் சமையல் வேலைகளை செய்துக் கொண்டிருந்தார்.அப்பொழுது எதிர்பாராதவிதமாக திடீரென சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியது . இதில் சின்னம்மாளும், தூங்கிக் கொண்டிருந்த 5 வயது மகன் வீரன் மற்றும் 2 வயது பெண் குழந்தை திவ்யதர்ஷினியும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
பின்பு இவர்களின் உடல் சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைகாக எடுத்துச் செல்லப்பட்டது . இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.