Categories
தேசிய செய்திகள்

கரை ஒதுங்கிய மாணவியின் உடல்…. தற்கொலையா? வேறு ஏதும் காரணமா…? போலீஸ் விசாரணை…!!

12ம் வகுப்பு மாணவி ஒருவரின் சடலம் கடற்கரையில் ஒதுங்கிய சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காரைக்கால் மாவட்டத்திலுள்ள காரைக்கால்மேடு மீனவர் கிராமத்தின் கடற்கரை பகுதியில் இளம் பெண்ணின் சடலம் ஒன்று நேற்று காலை கரை ஒதுங்கியுள்ளது. இதைப்பார்த்த  அப்பகுதியினர் உடனே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காரைக்கால் நகர காவல்துறையினர் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசேகரன் நிவேதாவின் சடலத்தை கைபற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதைத்தொடர்ந்து அந்த மாணவி யார்? என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.

விசாரணையில் அவர் காரைக்கால்மேடு பகுதியில் வசிக்கும் மீனவர் பாலதண்டாயுதம் என்பவரின் மகள் நிவேதா (வயது 17) என்பது தெரியவந்துள்ளது. நிவேதா 12ம் வகுப்பு படிக்கும் மாணவி. இவர் கழுத்து மற்றும் காதுகளில் அணிந்திருந்த நகைகள் அப்படியே இருந்துள்ளன. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், மாணவியை யாரேனும் கொலை செய்தார்களா? அல்லது மாணவியே வேறு ஏதும் காரணத்திற்காக தற்கொலை செய்துகொண்டாரா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |