Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

வயிற்று வலியால் துடித்த வாலிபர்… திடீரென எடுத்த விபரீத முடிவு… கதறி அழுத குடும்பம்…!!!

பெரிய காஞ்சிபுரம் அருகே வயிற்று வலி தாங்க முடியாததால் வாலிபர் ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரிய காஞ்சிபுரம் அருகே முனிசிபல் காலனி பகுதியில் 28 வயதுடைய வினோத் குமார் என்பவர் வசித்துவருகிறார். அவர் மது பழக்கத்திற்கு அடிமையானவர். இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வயிற்று வலியால் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனையடுத்து வயிற்று வலி தாங்க முடியாத அவர் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், வினோத்குமார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Categories

Tech |