கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் மூன்று கட்டங்களாக நடத்தப்படும் என்று அம்மாநில தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பெரும்பாலான பணிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. ஆனால் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது, இருந்தாலும் டெல்லி மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் சற்று அதிகமாகவே காணப்படுகிறது. ஒரு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் கேரள மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு முடிவு செய்துள்ளது.
அவ்வாறு கடந்த மாதம் மூன்று கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று அம்மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி வருகின்ற டிசம்பர் எட்டாம் தேதி முதல்கட்ட தேர்தல், பத்தாம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல், 14ஆம் தேதி மூன்றாம் கட்ட தேர்தலும் நடைபெறுகிறது. அதன்பிறகு டிசம்பர் 16ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.