Categories
தேசிய செய்திகள்

இன்று ஒரே நாளில் 7 ஆயிரம்… கேரளாவில் கொரோனா இரண்டாவது அலை… மக்கள் அச்சம்…!!!

கேரள மாநிலத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்துள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கேரள மாநிலத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 6,920 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,66,567 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 26 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது வரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,613 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இன்று மட்டும் கொரோனா பாதிப்பிலிருந்து 7,699 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதனால் தற்போது வரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 3,80,650 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது வரை 84,087 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Categories

Tech |