Categories
உலக செய்திகள்

“அவசரமாக விசா வேண்டும்” வெளிநாட்டு கணவருக்கு நடந்த கொடூரம்…. பார்க்க துடித்த மனைவி…!!

மளிகை கடை நடத்தி வந்த நபரை 3 பேர் சேர்ந்து குத்தி கொலை செய்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் தெலுங்கானாவை சேர்ந்த முகமது ஹாரிப் மொய்தீன்(37) என்பவர் வாழ்ந்து  வந்துள்ளார். இவர் அங்கு மளிகை கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று முகமது மர்ம நபர்களால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இதை அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்று  சடலத்தை மீட்டுள்ளனர். மேலும் இந்த கொலையானது தொழில் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக நடந்தது தான் என்று காவல்துறையினர் தெரிவித்ததுடன், இது சம்பந்தமாக 3 பேரை கைது செய்துள்ளனர்.

கொலையாளிகளான சோனி சூரியவம்சம், காதலியான லவுரா மற்றும் கோபி பின்ஹக்கா ஆகிய மூவரும் சேர்ந்து முகமதை நெஞ்சு மற்றும் கை பகுதியில் சரமாரியாக குத்தி தாக்கி கொலை செய்துள்ளனர். இதையடுத்து  தன் கணவரின் இறந்த செய்தி கேட்ட முகமதுவின் மனைவி மீனாஸ் பாத்திமா தன் கணவரை பார்க்க அமெரிக்காவுக்கு செல்வதற்கு அவசர விசா வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் “நானும் என் அப்பாவும் அவசர விசாவில் அமெரிக்காவுக்கு செல்ல மாநில அரசு உதவ வேண்டும்.

ஏனெனில் அமெரிக்கா சென்று நான் என் கணவரை பார்த்து அவருக்கு செய்ய வேண்டிய இறுதி சடங்குகளை செய்ய வேண்டும். என்னுடைய கணவர் கடந்த 10 வருடங்களாக அமெரிக்காவில் மளிகை கடை நடத்தி வருகிறார். தற்போது தான் எங்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. சம்பவத்தன்று காலை என் கணவர் என்னிடம் தொலைபேசியில் பேசினார் அதன் பிறகு அரை மணி நேரம் கழித்து போன் செய்வதாக கூறி போனை அணைத்து விட்டார். இதையடுத்து அவரிடமிருந்து எந்த அழைப்பும் எனக்கு வரவில்லை, இறந்த தகவல் மட்டும் தான் எனக்கு வந்தது” என்று அழுதுகொண்டே கூறியுள்ளார்.

Categories

Tech |