தமிழகத்தில் மாவட்ட ஆட்சியர்களுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கை பற்றி தலைமைச் செயலாளர் கே.சண்முகம் நாளை ஆலோசனை கூட்டம் நடத்த முடிவு செய்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன், தலைமைச் செயலாளர் கே.சண்முகம் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறார். அவ்வகையில் நாளை பிற்பகல் 3 மணி அளவில், காணொலிக் காட்சி மூலமாக தலைமைச்செயலகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளார்.
அந்தக் கூட்டத்தில், கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், குடியிருப்பு பகுதிகளில் இருக்கின்ற ஆக்கிரமிப்புகளை ஒழுங்கு செய்வது, வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் காப்பீடு, ஊரக வீட்டுவசதி மற்றும் பழங்குடியினருக்கான வீட்டு வசதி, ஆன்லைன் பட்டா மற்றும் மேலும் சில விவகாரங்கள் குறித்து அந்தக் கூட்டத்தில் ஆலோசனை செய்யப்படுகிறது.