அதிபர் தேர்தலில் துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் கமலா ஹரீஷ் ஜெயிக்க வேண்டி கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற இருக்கிறது.
கமலா ஹரீஷின் குலதெய்வமான துளசேந்தபுரத்திலுள்ள தர்மசாஸ்தா கோவிலுக்கு அவரது உறவினர்கள் வருடந்தோறும் நன்கொடை வழங்குவதாக கோவில் நிர்வாகத்தினர் கூறியுள்ளனர். மேலும் கமலா தேர்தலில் ஜெயிக்க வேண்டி கிராம மக்கள் நவம்பர் 3ம் தேதியன்று பாலாபிஷேக பூஜை நடத்துவது மட்டுமல்லாமல் அவருக்காக பேனர்களும் வைத்துள்ளனர். இது குறித்து கோவில் நிர்வாகியான எஸ்.வி ரமணன் கூறுகையில், “கமலா சிறியவயதில் இந்த கோவிலுக்கு வந்திருக்கிறார். மேலும் அவருடைய பெயர் நன்கொடையாளர்கள் பட்டியலில் உள்ளது. கிராம மக்கள் கேட்டு கொண்டதிற்கு இணங்க பூஜைக்கு சம்மதித்தோம்” என்று கூறினார்.
முதல் ஆசிய அமெரிக்க பெண்ணும், முதல் கறுப்பினத்தை சேர்ந்தவரும் தான் கமலா ஹரீஷ்(55). இவருடைய அம்மா இந்தியாவையும், அப்பா ஜமக்காவையும் சேர்ந்தவர்கள். இதற்கு முன்பு இவர் இரண்டு தடவை பெண்கள் துணை அதிபர் பதவிக்கு போட்டியிட்டுள்ளார். 2008ம் வருடம் சாரா பாலினும், 1984 ஜெரால்டினும் போட்டியிட்டு வெற்றி பெறாததால், தற்போது இவர் வெற்றி பெற்றால் முதல் முதல் பெண் துணை அதிபர் என்ற பெருமையை பெறுவார்.
கமலா இந்திய கலாச்சாரத்துடன் இணைத்தே வாழ்ந்து வந்ததாகவும், தன் அம்மாவின் கறுப்பின கலாச்சார மாற்றத்தால் தன்னையும் அவ்வாறு மாறியதாகவும் கூறியுள்ளார். மேலும் இவர் ஜனநாயக கட்சியின் வளரும் நட்சத்திரமாக அறியப்படுகிறார். 2024ம் வருடம் கமலா துணை அதிபர் பதவியில் ஜெயித்தால் அதிபர் போட்டியில் பங்கு பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.