Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

அமைச்சர் துரைக்‍கண்ணு உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்‍கம் …!!

தமிழக வேளாண்மை துறை அமைச்சர் திரு. வி.ரா துரைக்கண்ணுவின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு கடந்த 13-ம் தேதி மூச்சுத்திணறல் ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டரர். பின்னர் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு கடந்த 19 நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் துரைக்கண்ணு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார். அவரது உடல் சென்னையில் இருந்து இன்று பிற்பகல் சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் ராஜகிரி கொண்டு செல்லப்பட்டது.

அவரது வீட்டின் அருகே உள்ள மைதானத்தில் உடல் வைக்கப்பட்டு அமைச்சர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து வன்னியடி கிராமத்தில் உள்ள தோட்டத்தில் அரசு மரியாதையுடன் துரைக்கண்ணுவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Categories

Tech |