திருச்சியில் காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுகா காடுவெட்டி கிராமத்தை சேர்ந்தவர் குப்புசாமி இவரது மகன் நவீன் இவர் மேஸ்திரியாக வேலை பார்த்து வந்துள்ளார். நாமக்கல் மாவட்டம் ஆலம்பட்டியை சேர்ந்தவர் கணேசன்என்பவரது மகள் சுஜிபாலா. நவீன் கட்டட வேலைக்காக பேருந்தில் சென்ற போது சுஜிபாலாவின் அறிமுகம் ஏற்பட்டிருக்கிறது.
நாளடைவில் இவர்களது சந்திப்பு காதலாக மாறி மூன்று மாதங்களாக இருவரும் காதலித்து வந்தனர்.இந் நிலையில் கடந்த 29-ஆம் தேதி பெற்றோர்களுக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி ஊரின் எல்லையில் உள்ள ராமசாமி என்பவருக்குச் சொந்தமான ஒரு குடிசை வீட்டில் தங்கியிருக்கின்றனர்.
ஆனால் பெற்றோர்கள் தங்களை பிரித்துவிடுவார்கள் என இருவரும் அதே வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர். இதனைஅவ்வழியே சென்றவர்கள் பார்த்து காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.