நடிகை ஹன்சிகா தனது மஹா படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் நடிகர் சிம்புவிற்கு டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்
இயக்குனர் யு.ஆர். ஐமீல், நடிகை ஹன்சிகா கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் மஹா.இது ஹன்சிகாவின் 50-வது திரைப்படம்.கொரோனா ஊரடங்கால் இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் கடந்த மாதம் அரசின் அனுமதியுடன் மஹா திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.
நேற்று இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததை ட்விட்டரில் தெரிவித்த ஹன்சிகா இப்படம் தனக்கு சிறந்த அனுபவமாக இருந்தது. படத்தில் தன்னுடன் பயணித்த அனைவருக்கும் நன்றி. முக்கியமாக சிம்புவுக்கு மிகப்பெரிய நன்றி என்று பதிவிட்டுள்ளார். இப்படத்தில் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.