Categories
அரசியல் மாநில செய்திகள்

நீங்க படிச்சீங்களா மேடம் ? கேள்வி கேட்ட நிருபர்…. நச்சுனு பதிலளித்த குஷ்பு…!!

மனு தர்மத்தை நீங்கள் படிச்சுடீங்களா ? என குஷ்புவிடம் கேட்ட கேள்விக்கு அவர் நச்சுனு பதிலளித்துள்ளார் 

மனுதர்மத்தை குறிப்பிட்டு பெண்களைத் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் இழிவாகப் பேசினார்,  தரக்குறைவாக பேசினார் என்று பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இன்று பாஜக மகளிரணி சார்பாக மாநிலம் தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சிதம்பரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்க சென்ற குஷ்புவை காவல்துறையினருக்கு மாவட்ட எல்லையில் கைது செய்து செய்தனர்.இ மாலை குஷ்பு விடுதலை செய்யப்பட்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது… மனுஸ்மிருதியை முழுதாக முழுமையாக படித்து விட்டீர்களா மேடம் ? என்ற கேள்விக்கு…  நீங்க படிச்சிட்டீங்களா என்று பதில் அளித்த குஷ்பு,  3700 வருஷத்துக்கு முன்பு, 45 பேர் சேர்ந்து எழுதினாங்க. அதற்குப் பிறகு எத்தனை பேர் கை மாறி, வேற வேற மொழிகளில் எழுதி உள்ளார்கள். இப்போ அது  ரொம்ப முக்கியமா ? நம்ம நாட்டுல இன்னைக்கு பிரதமர் மோடி அவர்கள் கொரோனா பாதிப்பில் மக்களுக்கு எப்படி நல்லது செய்ய முடியும் ? என்று  பார்த்துட்டு இருக்கோம்.

என்னென்ன திட்டங்கள் கொண்டு வந்தா மக்கள் நல்லா இருப்பாங்க என்று பார்த்துட்டு இருக்கோம். அப்படி இருக்கும்போது இந்த நேரத்தில் மனுஸ்மிருதியில் 3700 வருஷத்துக்கு முன்னால எழுதினத இப்போ படித்து விட்டு நீங்களும், நானும் என்ன பண்ண போறேம். விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் படிச்சிட்டு அதிலிருந்து இரண்டு வரிகள் சொல்லிட்டு என்ன சாதிக்க போறாரு என குஷ்பு தெரிவித்தார்.

Categories

Tech |