குழந்தை இல்லாத வெறுப்பில் பெண் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .
உளுந்தூர்பேட்டையில் உள்ள ப.கிள்ளனூர் கிராமத்தில் வசிப்பவர்கள் வெங்கடேசன்(வயது 31)-கஸ்தூரி(29) தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை என்பதால் கஸ்தூரி மிகுந்த மன உளைச்சலில் இருந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துடன் வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து மயங்கி விழுந்தார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அதன் பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் கஸ்தூரி அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து திருநாவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் மற்றும் கஸ்தூரிக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் மட்டுமே ஆவதால் வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்தாரா? என்பது குறித்து திருக்கோவிலூர் ஆர்.டி.ஓ. சாய்வர்தினி விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.