Categories
உலக செய்திகள்

சாதகமான முடிவைத் தரும் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி மருந்து …!!

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரித்துள்ள கோவிட் தடுப்பூசி மருந்து சாதகமான ஆய்வகம் முடிவுகளை அளித்து வருவதை அடுத்து அந்த மரத்தின்மீது உலக அளவில் நம்பிக்கை அதிகரித்து வருகிறது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி மருந்தை லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆஸ்ட்ரோ ஜெனிக்க நிறுவனம் தயாரித்துள்ளது. இரண்டு கட்ட சோதனையில் திருப்திகரமான முடிவுகள் வெளியாக இருக்கும் நிலையில் அந்த தடுப்பு மருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் மூன்றாவது கட்டமாக மனிதர்கள் மீது செலுத்தப்பட்டு சோதனை இடப்படுகிறது. இதுவரை கிடைத்துள்ள மருத்துவ சோதனை முடிவுகளில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி மருந்து வயதானவர்கள் உடலில் மட்டுமல்ல இளைஞர்கள் உடலிலும் சரிசமமாக நோய் எதிர்ப்பு சக்தி தூண்டுவது உறுதியாகி இருக்கிறது.

இந்த தகவலை நேற்று வெளியிட்டுள்ள மருந்து தயாரிப்பு நிறுவனம் ஆஸ்ட்ரோ ஜெனிக்க வயதானவர்கள் உடலில் மட்டும் சிறிதளவு பக்கவிளைவுகள் தென்படுவதாக கூறியிருக்கிறது. உலக அளவில் இதுவரை 11 லட்சத்து 65 ஆயிரம் உயிர்களை கொரோனா பறித்து சென்றுள்ள நிலையில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி மருந்தின் முடிவுகள் மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் சர்வதேச அளவில் ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பு மருந்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Categories

Tech |