Categories
சற்றுமுன் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

BREAKING: OBC இடஒதுக்கீடு – உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு ….!!

மருத்துவப்படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மருத்துவப் படிப்புகளில் மத்திய தொகுப்புக்கு மாநிலங்களால்  வழங்கப்படும் இடங்களில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கக்கோரி தமிழக அரசு மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டன. இந்த வலக்கை  நீதிபதிகள் நாகேஸ்வரராவ் ஹேமந்த் குப்தா அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த 15ஆம் தேதி விசாரித்தது.

அப்போது இந்த ஆண்டிலேயே ஓ.பி.சி இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தியது. ஆனால் மத்திய தொகுப்பு இடங்களுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஒபிசி பிரிவினருக்கு நடப்பாண்டில் 50% மட்டுமல்ல 27 சதவீத இட ஒதுக்கீட்டையும் கண்டிப்பாக வழங்க முடியாது என பிரமாண பத்திரத்தில் மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்தது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். மேலும் அனைத்து தரப்பினரும் எழுத்துப்பூர்வ வாதங்களை கடந்த 20-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த நிலையில் ஓபிசி மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கோரிய வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

ஓபிசி பிரிவு மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இந்த ஆண்டு 50 சதவீத இட ஒதுக்கீடு இல்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கிய 50% மருத்துவ இடத்தில் 50 சதவீதத்தை தமிழக ஓபிசி பிரிவினருக்கு வழங்க வழக்கு தொடரப்பட்டிருந்தது. இட ஒதுக்கீட்டை நடப்பாண்டிலேயே நடைமுறைப்படுத்த கூறியதை உச்ச நீதிமன்றம் தற்போது நிராகரித்துவிட்டது.

Categories

Tech |