விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் சமீபத்தில் இந்து பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்தனர். மேலும் விடுதலை சிறுத்தை கட்சிக்கு எதிராகவும், திருமாவளவன் எதிராகவும் போராட்டம் நடத்தின. இந்த நிலையில் தற்போது திருமாவளவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்து மத பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசியது உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
