Categories
உலக செய்திகள்

போலீசுடன் மல்லுக்கட்டிய ராணுவம் … பாகிஸ்தானில் நடப்பது என்ன ? விசாரணைக்கு உத்தரவு ….!!

ராணுவத்தினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 10 பேர் இறந்ததாக வெளியான தகவல் குறித்து விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை எதிர்த்து எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் முன்னாள் பிரதமர் நவாஸின் மருமகன் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். அவரை கைது செய்வதற்காக ராணுவ வீரர்கள் சிந்து மாகாண இன்ஸ்பெக்டர் ஜெனரல் முஸ்தாபாவை  கடத்திச்சென்று கட்டாயப்படுத்தி வழக்கு பதிந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனை தொடர்ந்து சிந்து மாகாணத்தில் உள்ள காவல்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு முடிவெடுத்தனர். எனவே விடுமுறைக்காக அவர்கள் விண்ணப்பித்தனர். இது உயரதிகாரிகள் உட்பட இராணுவ தளபதி வரை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள ராணுவம் உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து காவல்துறையினர் போராட்டத்தை கைவிட்டனர்.

இதனிடையே சிந்து மாகாண காவல்துறையினருக்கும் ராணுவத்தினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடைபெற்றது என்றும், அதில் கராச்சி காவல்துறை அதிகாரிகள் 10 பேர் உயிரிழந்ததாகவும் தகவல் காட்டுத்தீ போல் பரவியது. இதனையடுத்து உடனடியாக விசாரணை மேற்கொள்ளும் படி ராணுவ தலைமை தளபதி ராணுவ கமாண்டர்க்கு  உத்தரவு பிறப்பித்தார் என கூறப்படுகிறது.

Categories

Tech |