Categories
லைப் ஸ்டைல்

எச்சரிக்கை..! ஏசி காரில் போறிங்களா….? தெரியாம கூட இதை பண்ணாதீங்க… உயிரே போயிருக்கு…!!

காரில் ஏசி போட்டு தூங்குவதனால் உயிரிழக்கும் அபாயம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

நீண்ட தூரம் பயணம் செய்யும் போது பலர் காரில் ஏசி போட்டு உறங்குவதை வழக்கமாக வைத்திருப்பார். ஆனால் தற்போது இந்தப் பழக்கம் மரணத்தை கொடுத்து விடுமா என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்துள்ளது. கார் இன்ஜினில் இருந்து வெளிவரும் கார்பன் மோனாக்சைட் சுவாசிக்கும்போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழக்கும் அபாயம் உள்ளது. இது போன்று நொய்டாவில் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் காரில் தூங்கிக் கொண்டிருந்தபோது உயிரிழந்து சடலமாக மீட்கப்பட்டார். அதுமட்டுமன்றி 2019ஆம் ஆண்டு சென்னையில் கார் ஓட்டுநர் ஒருவர் ஏசியை போட்டுவிட்டு தூங்கிய போது உயிரிழந்தார்.

ஏசி வழியாக காருக்குள் நுழைந்த கார்பன் மோனாக்சைடை தூங்கிக் கொண்டிருந்தவர்கள் தெரியாமல் சுவாசிப்பதால் உயிரிழந்ததாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இயந்திரம் வெளியேற்றும் புகையில் முக்கியமாக இருப்பது கார்பன் மோனாக்சைட் மேலும் மற்ற விஷ வாயுக்கள். மூடி இருக்கும் இடங்களில் கார்பன் மோனாக்சைட் அதிக அளவு தாக்கத்தை ஏற்படுத்தும். முதலில் ரத்தத்தில் இருக்கும் ஆக்சிஜனை கார்பன் மோனாக்சைட் மாற்றியமைக்கும். இது மூச்சுத்திணறலை ஏற்படுத்திவிடும்.சென்னையிலுள்ள ஆஸ்துமா மற்றும் ஒவ்வாமை மையத்தை நடத்தி வரும் ஆலோசகர் ஸ்ரீதரன் இதுபோன்ற மரணம் குறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.

ஒருவர் அதிக அளவு கார்பன் மோனாக்சைடு சுவாசிக்கும்போது அது விரைவில் மரணத்திற்கான சூழலை உருவாக்கும். காரணம் ரத்த அணுக்கள் கார்பன் மோனாக்சைடால் அதிக அளவு ஆக்சிஜனை வெளியேற்றுகின்றன. உடலில் இருக்கும் உயிரணுக்கள் அனைத்தும் செயல்படுவதற்கு ஆக்சிஜன் அத்தியாவசியமான ஒன்று. நாம் கார்பன் மோனாக்சைடு சுவாசித்தால் ஹீமோகுளோபின் இருக்கும் ஆக்சிஜன் ஹார்பாக்ஸ்கிலோவின் ஆக மாறிவிடும். இது உடலில் உள்ள செல்களை பயனற்றதாக மாற்றி உடலின் செயல்பாட்டை தடுக்கிறது. இதனால் கார்பன் மோனாக்சைடு சுவாசிக்கும் நபர் தலைசுற்றல், தலை வலி போன்ற பிரச்சனைகளை சந்திப்பார்.

அதுமட்டுமன்றி மரணத்தையும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. தூங்கிக் கொண்டிருக்கும் போது அவர்கள் உடலில் ஏற்படும் மாற்றத்தை உணர்ந்தால் உடனடியாக காரை விட்டு வெளியே வந்து மரணத்தில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியும். ஆனால் போதையில் இருந்தால் தங்களுக்கு ஏற்படும் ஆபத்து குறித்து அவர்களால் அறிந்து கொள்ள முடியாது. அப்போது அவர்கள் அமைதியான மரணத்தை பெறுவார்கள். வாயுக்கள், புகைத்தல் போன்றவற்றின் மனத்தினை நம்மால் உணர முடியும். ஆனால் கார்பன் மோனாக்சைடு எந்த மனமும் கிடையாது.

மூடப்பட்டிருக்கும் இடத்தில் எந்த அளவிற்கு கார்பன் மோனாக்சைட் நீங்கள் சுவாசிக்கிறீர்கள் என்பது உங்களுக்கு தெரியாத ஒன்று என ஸ்ரீதரன் விளக்கம் அளித்துள்ளார். அதுமட்டுமன்றி ஏசி முறையாக பராமரிக்கவில்லை என்றாலும் உயிர் இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. காரில் ஏசி போட்டு பயணித்தால் ஜன்னல்கள் திறந்து வைக்க வேண்டும் என்றும் வெகு தொலைவு பயணம் மேற்கொள்ள இருந்தால் ஏசியின் அமைப்பை சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அல்லது முடிந்த வரை காரில் தூங்குவதை விட உணவகங்களில் அல்லது தங்கும் விடுதிகளில் உறங்குவது பாதுகாப்பானது என ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |