ஆசிரியர் போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நாளை மறுநாள் தொடங்கும் என்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அறிவித்துள்ளது.
பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. தற்போது ஆசிரியர் தேர்வாணையம் அறிவித்துள்ள ஆசிரியர் தகுதி தேர்வுக்கும் , சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள 2-ம் நிலை காவலர் பணிக்கும் இலவச பயிற்சி வகுப்புகள் வரும் வெள்ளிக்கிழமை முதல் தொடங்க இருக்கிறது ஆசிரியர் தகுதி எழுத்து தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்பட உள்ளது.
மேலும் 2-ம் நிலை காவலர் தேர்விற்கு திங்கள் முதல் வெள்ளி வரை பயிற்சி வகுப்புகள் நடைபெறும். இந்த பயிற்சி வகுப்பின் போது முந்தைய ஆண்டுக்கான மாதிரி வினாத்தாள் வழங்கப்படும். ஆசிரியர் தகுதித்தேர்வு மற்றும் 2-ம் நிலை காவலர் பயிற்சி வகுப்புகள் ஒவ்வொரு வார புதன்கிழமைகளில் நடத்தப்படும். இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விரும்புவோர் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம் என பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.