Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

காஞ்சிபுரத்தில் குவிந்த மக்கள்… களைகட்டிய பட்டு சேலை வியாபாரம்…!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நீண்ட நாட்களுக்கு பின்னர் பட்டு சேலை வியாபாரம் அமோகமாக நடந்ததால் வியாபாரிகள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பட்டு நகரமாக திகழும் காஞ்சிபுரத்தில் பட்டு சேலைகள் விற்பனை முழுவதும் முடங்கியது. அதனால் வியாபாரிகள் மற்றும் நெசவாளர்கள் அனைவரும் பெரும் அவதிப்பட்டு வந்தனர். ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் பட்டு சேலை விற்பனை செய்யும் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் திறக்கப்பட்டு பட்டுசேலை வியாபாரம் குறைந்த அளவில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது ஐப்பசி மாதம் தொடங்கி உள்ள நிலையில் முகூர்த்த நாளான நேற்று காஞ்சிபுரம் நகரிலுள்ள பட்டு சேலை விற்பனை கடைகள் மட்டும் பட்டு கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றில் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் பட்டு சேலைகளை வாங்குவதற்கு திரண்டனர்.

நீண்ட நாட்களுக்குப் பின்னர் பட்டு சேலை வியாபாரம் அமோகமாக நடந்ததால், வியாபாரிகள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பட்டு சேலைகளை வாங்குவதற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து அதிக அளவு மக்கள் வந்ததால், அவர்கள் வந்த வாகனங்கள் நிறுத்தி இருந்ததால் அங்கு சாலைகளில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Categories

Tech |