ஜெயங்கொண்டம் அருகே கேந்தி பூக்கள் உற்பத்தியில் பட்டதாரி இளைஞர்கள் ஆர்வத்துடன் ஈடுபடுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் அடுத்த சிலால் கிராமத்தில், கல்லூரி படிப்பை முடித்து பட்டம் பெற்ற இளைஞர்கள் வேலைக்கு செல்லாமல் புதியமுயற்சியாக விவசாயம் செய்ய தொடங்கியுள்ளனர். மேலும் தமிழகத்தில் திருமணம் மற்றும் பிற சுப நிகழ்ச்சிகளுக்கும் மாலை கட்ட அலங்காரம் செய்ய பயன்படும் கேந்திப்பூக்களை அதிகமாக பயிரிட்டுள்ளனர்.
அதுமட்டுமில்லாமல் தமிழகமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைப்பதால் கேந்திப்பூக்கள் உற்பத்தியில் ஈடுபடுவதாக கூறுனர் .மேலும் கேந்தி பூக்கள் மட்டுமில்லாமல் நிலக்கடலை, செங்கரும்பு, என பருவத்திற்கு ஏற்ற சூழ்நிலையில் பயிர் விளைச்சல் செய்து வருவதாகவும் கூறினார்.