விஜய்சேதுபதி படத்திற்கு எதிர்ப்புஎழுந்துள்ளதால் படக்குழுவினர் அறிக்கை விடுத்துள்ளனர்.
இயக்குனர் ஸ்ரீபதி ரங்கசாமி இயக்க உள்ள படமான 800. இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்திய கதையாகும். இதில் முத்தையா முரளிதரனாக- நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறார். இதற்கு கடும் எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ளது. மறு பக்கம் விஜய் சேதுபதி ரசிகர்கள் ஆதரவாக we stand with vijay சேதுபதி என டுவிட்டரில் ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி வந்தனர்.இந்த நிலையில் படக்குழுவினர் திடீர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு விஜய் சேதுபதி நடிக்க உள்ள 800 படமானது அரசியலாக்கப படுவதை அறிகின்றோம்.
இதில் எந்தவித அரசியலும் கிடையாது. இப்படத்தில் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரன் தனது வாழ்க்கையில் எப்படி பல தடைகளைத் தாண்டி உலக அளவில் சிறந்த பந்து வீச்சாளராக உயர்ந்தார் என்பதனை காட்டும் விதமாக அமைந்துள்ளது. இதுவே இத்திரைப்படத்தின் கதை அம்சம் ஆகும்.தயாரிப்பாளராக நான் ஒன்றை நிச்சயமாக சொல்ல முடியும் படத்தில் ஈழத் தமிழர்களின் போராட்டத்தை சிறுமை படுத்தும் விதமாக காட்சி அமைப்புகள் கிடையாது. இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.