Categories
தேசிய செய்திகள்

பாலியல் வன்கொடுமை வழக்குகள் – மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம்

பாலியல் வன்கொடுமை வழக்குகளில் இரண்டு மாதங்களுக்குள் போலீஸ் விசாரணை முடிய வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் விசாரணை துரிதமாக நடைபெற வேண்டுமென்றும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளை வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் எழுதியுள்ள கடிதத்தில் பாலியல் வன்கொடுமை வழக்குகளில் இரண்டு மாதங்களில் போலீஸ் விசாரணை முடிக்கப்பட வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட பெண்ணின் சம்மதத்துடன் அவரை 24 மணி நேரத்திற்குள் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. மீண்டும் மீண்டும் பாலியல் குற்றத்திற்கு ஈடுபடும் குற்றவாளிகளை அடையாளம் காண தேசிய தரவு  தளத்தை பயன்படுத்த வேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

Categories

Tech |