Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கடல் சீற்றம் – 3-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்‍கச் செல்லவில்லை

நாகை மாவட்டம் வேதாரண்யம் கடல் பகுதியில் பலத்த சீற்றம் காரணமாக 3-வது நாளாக மீனவர்கள் இன்று மீன்பிடிக்க செல்லவில்லை.

வேதாரண்யம் கடல் பகுதியில் கடந்த சில தினங்களாக கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் இருந்தனர். இந்நிலையில் மூன்றாவது நாளாக இன்றும் கடல் சீற்றம் அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம் போன்ற கிராமங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. 500 பைபர் படகுகள் கடற்கரை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

Categories

Tech |