Categories
உலக செய்திகள் சற்றுமுன்

சீனாவிற்கு  அடுத்தடுத்த பன்ச்… டிக் டாக் செயலியை தடை செய்தது பாகிஸ்தான்…!!!

இந்தியா அமெரிக்காவினை தொடர்ந்து தற்போது பாகிஸ்தானும் டிக்-டாக் செயலிக்கு தடை விதித்துள்ளது.

இந்தியா சீன எல்லை பிரச்சனை காரணமாக ஏற்பட்ட ராணுவ  போரில் இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர்.இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக டிக் டாக் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.இதன் மூலம் சீனாவிற்கு பெருமளவு இழப்பு ஏற்பட்டது என கூறப்பட்டது.டிக் டாக் செயலியினை பதிவிறக்கம் செய்வதில் முன்னணி நாடுகளில் ஒன்றாக இருந்த இந்தியா அதை தடை செய்ததன் மூலம் சுமார் 45,000 கோடி  ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டது என தகவல் வந்தது. இதனையடுத்து அமெரிக்காவும் டிக்டாக் செயலிக்கு  தடை விதித்திருந்தது.தற்போது இந்தியா,அமெரிக்காவினை  தொடர்ந்து பாகிஸ்தானும் டிக் டாக் செயலிக்கு  தடை விதித்துள்ளது.

Categories

Tech |