Categories
சென்னை மாவட்ட செய்திகள்

2 மாதத்திற்கு பிறகு சென்னை வந்த காசிமேடு மீனவர்கள் …!!

கடலுக்கு மீன்பிடிக்க சென்று காணாமல் போன சென்னை காசிமேடு மீனவர்கள் பெரும் இன்னல்களை எதிர்கொண்ட பின் ஒரு வழியாக தாயகம் திரும்பி இருக்கின்றனர்.

வாழ்க்கையில் போராட்டம் இருக்கலாம் ஆனால் சென்னையை சேர்ந்த மீனவர்கள் 9 பேருக்கு கடந்த இரண்டு மாதங்களாக போராட்டமே வாழ்க்கை ஆகிவிட்டது. ஆழ்கடல் மீன் பிடிப்புக்காக ஜூலை 22-ஆம் தேதி கடலுக்கு சென்று சென்னை காசிமேடு மீனவர்கள் 9 பேர் மீண்டும் கரை சேரவில்லை. படகு பழுதானதால் நடுக்கடலில் தத்தளித்து நியான்மர் நாட்டில் கரை ஒதுங்கி இரண்டு மாதங்களாக பல்வேறு இன்னல்களை சந்தித்த காசிமேடு மீனவர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

நியான் மரிலிருந்து டெல்லி வந்த சென்னை மீனவர்கள் அங்கு இருந்த விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டனர். அவர்களை தமிழக மீன்வளத்துறை அமைச்சர் திரு. டி. ஜெயக்குமார் நேரில் சென்று வரவேற்றார். இதனிடையே நியான்மரில் சென்னை மீனவர்கள் இருந்தபோது சேதமடைந்த படகு ஒன்றில் புனரமைக்கும் முயற்சியில் ஈடுபட்ட காசிமேடு மீனவர்களில் ஒருவர் கடல் நீரில் காணாமல் போனார் அவரை நியான்மர்  அதிகாரிகள் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |