புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மூன்று நாட்கள் டிராக்டர் பேரணியை ராகுல்காந்தி தொடங்கியுள்ளார்
மத்திய அரசு அறிமுகப்படுத்தி இருக்கும் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. எதிர்க்கட்சியினரும் வேளாண் சட்டத்திற்கு கடுமையாக தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். புதிதாய் கொண்டு வந்திருக்கும் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி விவசாயிகளுக்கு ஆதரவாக ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் இன்றிலிருந்து மூன்று நாட்கள் டிராக்டர் பேரணி நடத்துகிறார்.
பஞ்சாப் மாநிலத்தில் இருக்கும் பத்னி காலன் பகுதியில் முதல் நாளான இன்று பேரணி தொடங்கியது. தொடக்க நிகழ்ச்சியில் மாநில முதல்வர் அமரீந்தர் சிங் காங்கிரஸ் தலைவர் சுனில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் கேசி வேணுகோபால், சித்து, ஹரிஷ் ராவத் உள்ளிட்ட பலர் ராகுல் காந்தியுடன் பங்கேற்றனர். புதிய வேளாண் சட்டங்கள் பற்றி கண்டனம் தெரிவித்து உரையாற்றி முடிந்தபிறகு பேரணி தொடங்கியது. மாநில தலைவர் சுனில், ராகுல் காந்தி மற்றும் முதல்வர் அமரீந்தர் சிங் ஆகிய மூவரும் ஒரே டிராக்டரில் பேரணியில் பயணித்தனர்.
ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் தொண்டர்கள் டிராக்டர்களிலும் கால்நடையாகவும் அணிவகுத்து சென்றனர். இந்த பேரணியானது ஹரியானாவில் நாளை மறுநாள் நிறைவடைய உள்ளது. பஞ்சாபிலிருந்து ஹரியாணாவிற்கு பேரணியாக ராகுல்காந்தி வர இருக்கும் பாதை பற்றி தொடர்ந்து காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் அரியானா மாநிலத்தில் ராகுல் காந்தியை அனுமதிக்க மாட்டோம் என்று உள்துறை மந்திரி அணில் விஜ் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.