இந்தியாவின் விஐபிகள் அனைவரும் பயன்படுத்துவதற்காக ஏர் இந்தியா ஒன் என்ற அதிநவீன விமானம் இந்தியா வந்தடைந்துள்ளது.
இந்தியாவின் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகிய முக்கிய பிரமுகர்கள் அனைவரும் ஏர் இந்தியாவின் போயிங் 747 ரக விமானங்களை தற்போது பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த விமானங்கள் அனைத்தும் ஏர் இந்தியா
ஒன் என்று அழைக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நாட்டின் விஐபிக்கள் அனைவரும் பயன்படுத்துவதற்கு 2 ஜம்போ விமானங்களை வாங்குவதற்கு முடிவு செய்யப்பட்டிருந்தது. அதன்படி 190 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான 2 போயின் 777 விமானங்களை இந்தியாவிற்கு வழங்குவதற்கு அமெரிக்காவின் போயிங் நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் ஒப்புதல் வழங்கியது.
அந்த விமானம் கடந்த சில நாட்களுக்கு முன் தயாராகியது. அந்த விமானத்தை பெறுவதற்கு இந்திய அதிகாரிகள் அனைவரும் அமெரிக்காவிற்கு புறப்பட்டுச் சென்றனர். அவர்களுடன் மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் சில சென்றிருந்தனர்.இந்த நிலையில் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு காண ஏர் இந்தியா ஒன் என்ற போயிங் 777 விமானம் இன்று இந்தியா வந்தடைந்துள்ளது. அந்த விமானம் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள் உள்ளிட்ட பல அதிநவீன வசதிகளை கொண்டுள்ளது.